இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்து.வர்.கள் சொல்வது என்ன?..

உலக அளவில் பலரும் சிக்கனை (கோழி இறைச்சி) விரும்பி சாப்பிடுகிறார்கள் என்றாலும் இந்தியாவில் சிக்கனை மிகவும் அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள். சிக்கன் குழம்பு, சிக்கன் ப்ரை, சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, லாலி பாப், கிரில் சிக்கன், தந்தூரி சிக்கன் என வகையான உணவுகளை உணவகங்கள் வழங்குகின்றன.

அதேநேரம் இரவில் சிக்கன் சாப்பிடக்கூடாது அது ஜீரணமாகாது.. காலை மற்றும் மதியம் மட்டுமே சாப்பிடலாம் என்பது சிலரின் வாதமாக இருக்கிறது. ஆனால் நம்மூரில் கிரில் சிக்கன் என்பதையே மாலை 6 மணிக்கு மேல்தான் போடுகிறார்கள்.. அதேபோல் சாலையோரங்களில் சில்லி சிக்கன் கடைகளும் மாலை நேரங்களில்தான் விற்பனை செய்யப்படுகின்றன.

எனவே இரவு நேரங்களில் சிக்கன் சாப்பிடலாமா? வேண்டாமா? என்பது பலருக்கும் குழப்பமான ஒன்றாகவே இருக்கிறது. இந்நிலையில் இதுபற்றி மருத்துவங்கள் என்ன சொல்கிறார்கள் என பார்ப்போம்..

இரவு நேரத்தில் சிக்கன் சாப்பிடுவது நல்லதுதான் என்றாலும் அதற்கு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதும் எப்படி அந்த சிக்கன் சமைக்கப்படுகிறது என்பதும் மிகவும் முக்கியம். எண்ணெயில் பொரித்த சிக்கனை தவிர்த்து விட்டு அதற்கு பதிலாக Grilled/ Steamed மற்றும் குறைந்த எண்ணெயில் சமைத்த சிக்கனை சாப்பிடலாம்.

அதேபோல் அதிக காரம், மசாலா மற்றும் எண்ணெய் சேர்த்து சமைத்த சிக்கனை தவிர்ப்பது நல்லது.. அது செரிமானத்திற்கு பிரச்சனையை உண்டு பண்ணலாம்..

இரவு 8 மணிக்குள் சாப்பிட்டு விட்டு உறங்குவதற்கு இரண்டு முதல் மூன்று மணி நேரம் இடைவெளி விடுவது நல்லது. குறிப்பாக சிக்கனுடன் கீரை, வெண்டைக்காய், காய்கறிகள் மற்றும் கோதுமை ரொட்டி ஆகியவை கலந்து சாப்பிடும் போது அது ஒரு சமச்சீர் உணவாக மாறும்.

அஜீரணம், அமிலத்தன்மை மற்றும் பிற செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள் இரவு நேரங்களில் சிக்கனை சிக்கன் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அதேநேரம் இரவு நேரத்தில் சிக்கனை சாப்பிட விரும்பாதவர்கள் அதற்கு பதிலாக மீன், தயிர் ,பருப்பு வகை உணவுகளை சாப்பிடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *